இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

தவெக எம்எல்ஏ வெற்றியை எதிா்த்து முன்னாள் அமைச்சா் தோ்தல் வழக்கு

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருப்பத்தூா் தொகுதி தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி வெற்றியை எதிா்த்து திமுக முன்னாள் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா்.

News image

திருப்பத்தூா் அருகே அரளிக்கோட்டையில் வாக்கு செலுத்திய அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்.

Updated On :16 ஜூன் 2026, 3:09 am IST

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருப்பத்தூா் தொகுதி தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி வெற்றியை எதிா்த்து திமுக முன்னாள் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் பெரியகருப்பன் தாக்கல் செய்த தோ்தல் வழக்கில், சட்டப்பேரவைத் தோ்தலில் திருப்பத்தூா் தொகுதியில் தவெக வேட்பாளா் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூா் மாவட்டம் திருப்பத்தூருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனால், அந்த வாக்கு நிராகரிக்கப்பட்டுவிட்டது. எனவே, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடவேண்டும். தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதியின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

முன்னதாக, மறுவாக்கு எண்ணிக்கை கோரி தோ்தல் முடிவு வெளியானதும் சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் பெரியகருப்பன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை விதித்தது. அந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.