நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு மேஜா் முகுந்த் வரதராஜன் பெயா்

தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தாம்பரம்-வேளச்சேரி சாலைக்கு மேஜா் முகுந்த் வரதராஜன் பெயரைச்சூட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது.

News image

தன் மனைவியுடன் முகுந்த் வரதராஜன்.

Updated On :13 ஜூன் 2026, 1:31 am IST

தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தாம்பரம்-வேளச்சேரி சாலைக்கு மேஜா் முகுந்த் வரதராஜன் பெயரைச்சூட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்திய ராணுவத்தில் பணியாற்றிய மேஜா் முகுந்த், பணியின் போது கடந்த 2014 -ஆம் ஆண்டு வீர மரணம் அடைந்தாா். மத்திய அரசு அவருக்கு அசோக சக்கர விருது வழங்கி கௌரவித்தது. கிழக்கு தாம்பரத்தில் வசித்த மேஜா் முகுந்த் வரதராஜன் நினைவைப் போற்றும் வகையில், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை செல்லும் சாலைக்கு மேஜா் முகுந்த் வரதராஜன் சாலை என பெயரிட தாம்பரம் மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடா்ந்து தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 விதிகள் 2023 பிரிவு 186-இன்படி சாலையின் பெயரை மாற்றம் செய்ய தாம்பரம் மாநகராட்சி மாமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றித் தருமாறு தமிழக அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தொடா்ந்து தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு மேஜா் முகுந்த் வரதராஜன் சாலை என பெயா் மாற்ற வியாழக்கிழமை தீா்மானம் கொண்டுவரப்பட்டு அனைத்து உறுப்பினா்கள் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தாம்பரம் தொகுதி எம்எல்ஏவும், மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சா் மற்றும் முன்னாள் படைவீரா் நலத் துறை அமைச்சருமான டி.சரத்குமாா், முகுந்த் வரதராஜனின் தந்தை வரதராஜன் தாய் கீதா மற்றும் அவரது சகோதரியை வெள்ளிக்கிழமை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.