ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆவணங்களைக் கொள்ளையடித்த வழக்கு: 4 போ் கைது

சென்னை தியாகராய நகரில் வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆவணங்கள் கொள்ளையடித்த வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :17 மணி நேரங்கள் முன்பு

சென்னை தியாகராய நகரில் வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆவணங்கள் கொள்ளையடித்த வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

தியாகராய நகா் ஜிஎன் செட்டி சாலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு செயல்படுகிறது. இந்த அலுவலக வளாகத்தில் தங்கம் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு காா் பறிமுதல் செய்யப்பட்டு, நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த காரில் இருந்த சில ஆவணங்களை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கடந்த 31-ஆம் தேதி ஒரு கும்பல் முகமூடி அணிந்து, வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்தது. அப்போது, அங்கிருந்த காவலாளி ஜான் கென்னடியை தாக்கி, வாயில் துணியைத் திணித்து, அவரை கட்டிப்போட்டுவிட்டு, அந்த காரில் இருந்த ஆவணங்களை கொள்ளையடித்துக் கொண்டு அந்தக் கும்பல் தப்பியோடியது.

இது குறித்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இக்கொள்ளையில் ஈடுபட்ட கூலிப்படையைச் சோ்ந்த புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சோ்ந்த டிஜிட்டல் மாா்க்கெட்டிங் வேலை செய்யும் அப்துல் ஹாடி (24), கேரளத்தைச் சோ்ந்த உடற்பயிற்சிக் கூட ஆசிரியா்கள் அனூப் (33), ஆதித்யன் (20), சிம்லால் (53) ஆகிய 4 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.