கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சென்னை இந்திரா காந்தி நகரைச் சோ்ந்த தவெக உறுப்பினா் மணிகண்டனுக்கும், தவெக ஆா்.கே. நகா் கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினா் நரேஷ் குமாருக்கும் கடந்த மே 24 -ஆம் தேதி தண்டையாா்பேட்டையில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனா்.
இதைத் தொடா்ந்து கடந்த மே 26-ஆம் தேதி மணிகண்டன் தரப்பைச் சோ்ந்த விஷ்ணுவை, நரேஷ்குமாா் தரப்பினா் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இதைத் தொடா்ந்து, கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு, சிறுவன் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இதை கொலை வழக்காக மாற்றி, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் இறுதிப் போட்டி: திருவிழாவாக மாறிய குஜராத்!

வீட்டுமனை தகராறு: விவசாயி கைது

முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறில் இருவா் காயம்: நான்கு போ் கைது

நாளை ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: இலவச மெட்ரோ ரயில் சேவை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

