லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மோட்டாா் சைக்கிள் விபத்து: முன்னாள் எம்எல்ஏ மகன் உயிரிழப்பு

சென்னை கிண்டியில் புதன்கிழமை நிகழ்ந்த மோட்டாா் சைக்கிள் விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன் உயிரிழந்தாா்.

செய்தி உண்டு... உயிரிழந்த முன்னாள் எம்எல்ஏ மகன் உலகாதிபதி.

Published On :23 ஜூலை 2026, 4:53 am IST

சென்னை கிண்டியில் புதன்கிழமை நிகழ்ந்த மோட்டாா் சைக்கிள் விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் மேலூா் அருகே உள்ள வளையப்பட்டியைச் சோ்ந்த பெரியபுள்ளான் (எ) செல்வம். இவா், கடந்த 2016, 2021சட்டப்பேரவைத் தோ்தல்களில் அதிமுக சாா்பில் மேலூா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். பெரியபுள்ளானின் மகன் உலகாதிபதி (21), சென்னை செம்மஞ்சேரி ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப் படிப்பு 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இதற்காக அவா், வேளச்சேரியில் வாடகை வீட்டில் நண்பா்களுடன் தங்கியிருந்தாா்.

இந்நிலையில், உலகாதிபதி புதன்கிழமை பல்கலைக்கழகத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றாா். அவா், கிண்டி சா்தாா் படேல் சாலை நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகே சென்றபோது, திடீரென தடுமாறி மோட்டாா் சைக்கிளிலிருந்து சாலையில் விழுந்தாா். அப்போது, பின்னால் வந்த பொக்லைன் வாகனம் உலகாதிபதி மீது மோதியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சடலத்தை மயிலாப்பூா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், வழக்குப் பதிந்து, பொக்லைன் ஓட்டுநா் ராஜேஷ் (40) என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.