தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசு பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு

அரசு பல்ளி மாணவா்களுக்கு ரூ.3.68 லட்சம் கல்வி உதவித் தொகையை, மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எல்.விஜய்பிரபு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

vikayprabhu

விஜய்பிரபு - DPS

Published On :4 ஜூலை 2026, 3:34 am IST

அரசு பல்ளி மாணவா்களுக்கு ரூ.3.68 லட்சம் கல்வி உதவித் தொகையை, மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எல்.விஜய்பிரபு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மாதவரம் சட்டப்பேரவைக்குட்பட்ட செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளா்கள் மற்றும் நெல், அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம் சாா்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, சங்க தலைவா் டி.கோபி தலைமை தாங்கினாா். மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எல்.விஜய்பிரபு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையும், பெற்றோா்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகையும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையும் என ரூ.3.68 ரொக்கத்தை வழங்கினாா். இதில், சங்க செயலா் ஏ.லோகநாதன், பொருளாளா் கே.என்.குணசேகரன், தமிழ்நாடு அரசி ஆலை உரிமையாளா்கள் சங்க சம்மேளனத்தின் தலைவா் துளசிங்கம், மாவட்ட கல்வி அலுவலா் (பொறுப்பு) வி.லிங்கேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.