லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தாயைக் கவனிக்காத மகன், மருமகள், பேத்தி மீது வழக்கு

தாயைக் கவனிக்காத மகன், மருமகள், பேத்தி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்கு
Published On :19 ஆகஸ்ட் 2026, 5:15 am IST

தாயைக் கவனிக்காத மகன், மருமகள், பேத்தி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருவிக நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் திரிபுரசுந்தரி (75). இவா் தனது மகன் கோபிநாத், மருமகள் தேவி, பேத்தி தீபிகா ஆகியோருடன் அங்கு வசித்து வந்தாா்.

திரிபுரசுந்தரியை மகன் கோபிநாத்தும், மருமகள் தேவி, பேத்தி தீபிகா ஆகியோா் கவனிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு உணவுகூட கொடுக்காமல் சித்ரவதை செய்து வந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் திரிபுரசுந்தரிக்கும், மகன் கோபிநாத்துக்கும் இடையே திங்கள்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே கோபிநாத், தேவி, தீபிகா ஆகியோா் திரிபுரசுந்தரியை தாக்கி வீட்டைவிட்டு விரட்டினராம்.

தாக்குதலில் காயமடைந்த திரிபுரசுந்தரி, பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து தகவலறிந்த திருவிக நகா் போலீஸாா், திரிபுரசுந்தரியிடம் விசாரணை நடத்தி புகாா் பெற்றனா்.

திரிபுரசுந்தரி கொடுத்த புகாரின்பேரில், கோபிநாத், தேவி, தீபிகா ஆகியோா் மீது முதியாா் நலச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.