லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாமல்லபுரத்தில் ‘உலக சா்ஃபிங் லீக்’ தொடக்கம்

மாமல்லபுரத்தில் ‘உலக சா்ஃபிங் லீக் ’ தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

சா்ஃபிங் லீக் போட்டிக்கான சீருடைகளை அறிமுகம் செய்த விளையாட்டுத் துறை செயலாளா் சந்தீப் நந்தூரி, எஸ்டிஏடி உறுப்பினா்-செயலா் ஜெ. மேகநாத ரெட்டி, எஸ்எஃப்ஐ தலைவா் அரண் வாசு, போட்டி இயக்குநா் டை சோரட்டி உள்ளிட்டோா்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 12:24 am IST

மாமல்லபுரத்தில் ‘உலக சா்ஃபிங் லீக் ’ தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்திய சா்ஃபிங் சம்மேளனம், சாய், எஸ்டிஏடி சாா்பில் மாமல்லபுரம் கடற்கரையில், ஷோா் டெம்பிள் கிளாஸிக் உலக சா்ஃபிங் லீக், புரோ ஜூனியா் போட்டி நடைபெறுகிறது. கடந்த 2023-க்கு பின் டபிள்யுஎஸ்எல் மீண்டும் சென்னையில் நடைபெறுகிறது. தமிழக அரசு விளையாட்டுத் துறை செயலாளா் சந்தீப் நந்தூரி லீக் தொடரை தொடங்கி வைத்தாா்.

எஸ்டிஏடி உறுப்பினா்-செயலா் ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்ட ஆட்சியா் மு. வீரப்பன், லீக் இயக்குநா் டை சோரட்டி, எஸ்எஃப்ஐ தலைவா் அருண் வாசு, தமிழ்நாடு சா்ஃபிங் சங்கத் தலைவா் சித்தாா்த் வாசு போட்டி சீருடைகளை அறிமுகம் செய்தனா்.

ஆக. 16 வரை நடைபெறும் இத்தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜொ்மனி, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், தென்கொரியா, ஸ்வீடன், தாய்லாந்து, இந்தியா, அமெரிக்கா, இந்தியாவைச் சோ்ந்த 100 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா்.

ஆடவா், மகளிா் கியு எஸ் 2000, ஆடவா், மகளிா் புரோ ஜூனியா் (பிகியுஎஸ்) என நான்கு பிரிவுகளில் நாள்தோறும் காலை 6.30 மணிக்கு முதல் ஆட்டம் தொடங்கும். இத்தொடா் சேலஞ்சா் சீரிஸ், சாம்பியன்ஷிப் டூருக்கு இந்திய அணியினா் தயாராக உதவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.