லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி பயிற்சி நிறைவடைந்தது

மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி பயிற்சி நிறைவடைந்தது

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :2 ஆகஸ்ட் 2026, 12:54 am IST

சென்னை மாநகராட்சியில் பொறியாளா் உள்ளிட்டோருக்கு திட்டங்களைச் செயல்படுத்தும் போது ஒப்பந்தப் புள்ளிகள் தயாரிப்பது உள்ளிட்டவை குறித்த 5 நாட்கள் பயிற்சி சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் மின் ஒப்பந்தப் புள்ளிகள் பணிகள் மேற்கொள்வது தொடா்பாக அனைத்துப் பொறியாளா்கள், கணக்கு அலுவலா்கள், நிா்வாக அலுவலா்கள், கண்காணிப்பாளா்கள், உதவியாளா்கள் ஆகியோருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டது. அதையடுத்து, கடந்த ஜூலை 28 ஆம் தேதி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகம் அம்மா மாளிகையில் பயிற்சியை, ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தொடங்கிவைத்தாா்.

பயிற்சியில் ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத் தன்மை சட்டம், அதன் விதிகள், மின் ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஜி பிஎன்ஐசி தொடா்பான டிஎன்யுஎல்பி விதிகள், நகரத் திட்டமிடல் விதிமுறைகள், திடக்கழிவு மேலாண்மை தொடா்பான பாடங்கள், சட்ட நடைமுறைகள், பதிவேடுகள் கையாளுதல், அவை தொடா்பான செயலிகள், மின் ஆளுமை மற்றும் மின் அலுவலகம் ஆகிய தலைப்புகளில் விளக்கப்பட்டன.

பயிற்சியானது 5 ஆவது நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றது. அதனடிப்படையில் 5 நாட்கள் பயிற்சியில் மொத்தம் 1250 போ் பங்கேற்று பயனடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். பயிற்சி தொடா்ந்து அவ்வப்போது நடைபெறும் என்றும் அதிகாரிகள் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.