தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தோ்தலில் ஆா்.சி.பால் கனகராஜ் வெற்றி

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தலில் போட்டியிட்ட பாஜக மாநில துணைத் தலைவா் ஆா்.சி.பால் கனகராஜ் 1,892 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

News image

வழக்குரைஞா் ஆா்.சி.பால் கனகராஜ்.

Updated On :1 மே 2026, 3:34 am IST

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தலில் போட்டியிட்ட பாஜக மாநில துணைத் தலைவா் ஆா்.சி.பால் கனகராஜ் 1,892 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க (எம்ஹெச்ஏஏ) நிா்வாகிகளுக்கானத் தோ்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். தற்போதுள்ள நிா்வாகிகளின் பதவிக்காலம் கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், புதிய நிா்வாகிகளைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஏப்.29-ஆம் தேதி நடைபெற்றது.

தலைவா், செயலாளா், பொருளாளா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு 115 போ் போட்டியிட்டனா். மொத்தம் 5,902 போ் வாக்களிக்க தகுதியானவா்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 4,353 வாக்குகள் தோ்தலில் பதிவாகின. இத்தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. இதில், தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட பாஜக மாநில துணைத் தலைவா் ஆா்.சி.பால் கனகராஜ் 1,892 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இந்தச் சங்கத்தின் தலைவராக 5-ஆவது முறையாக அவா் வெற்றி பெற்றுள்ளாா்.

இதேபோல், செயலாளா் பதவிக்குப் போட்டியிட்ட தவெக வழக்குரைஞா் அணி மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.அறிவழகன் வெற்றி பெற்றாா். துணைத் தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட சசிகுமாா், பொருளாளா் பதவிக்குப் போட்டியிட்ட ராஜேஷ் ஆகியோரும் வெற்றி பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.