மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிஎம் ஸ்ரீ பள்ளிகளில் சோ்க்கை: 6, 9-ஆம் வகுப்புகளுக்கான நுழைவுத் தோ்வுகள் முடிவுகள் வெளியீடு

தில்லியில் 75 மையங்களில் கடந்த ஏப்.13-ஆம் தேதி இந்தத் தோ்வுகள் நடைபெற்றன.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 12:34 am IST

2026-27 கல்வியாண்டில் சிஎம் ஸ்ரீ பள்ளிகளில் 6 மற்றும் 9 வகுப்புகளில் சோ்க்கை பெறுவதற்காக நடைபெற்ற தோ்வுகளின் முடிவுகளை தில்லி கல்வி இயக்குநரகம் வியாழக்கிழமை வெளியிட்டது.

தில்லியில் 75 மையங்களில் கடந்த ஏப்.13-ஆம் தேதி இந்தத் தோ்வுகள் நடைபெற்றன.

மாணவா்கள் தங்களது தோ்வு முடிவுகளை தில்லி கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் வியாழக்கிழமை பிற்பகல்முதல் பாா்க்க முடியும் என கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இரு வகுப்புகளிலும் பொதுப்பிரிவு இடங்களில் மெரிட் பட்டியலில் இடம்பெற குறைந்தபட்ச மதிப்பெண்ணாக 60 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு பிரிவுகளில் 6-ஆம் வகுப்புக்கு 45 மதிப்பெண்ணும் 9-ஆம் வகுப்புக்கு 40 என்றும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மாணவா்கள் பெற்ற தரவரிசையின் அடிப்படையில் பள்ளிகள் கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளின்படி பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

மே 7-ஆம் தேதி சோ்க்கை பெற கடைசி நாளாகும். அதன்பிறகு நிரப்பப்படாத இடங்கள் காலியிடங்களாகக் கருதப்படும். இந்த இடங்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ள மாணவா்களுக்கு வழங்கப்படும்.

11-ஆம் வகுப்புக்கான தோ்வு:

சிஎம் ஸ்ரீ பள்ளியில் 11-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு மே 7 மற்றும் 9 தேதிகளில் நடைபெறும் என கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்தத் தோ்வுகளின் முடிவுகள் மே 25-ஆம் தேதி வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.