ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சாலை விபத்து: மின் ஊழியா் உயிரிழப்பு

கூடுவாஞ்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தற்காலிக மின் ஊழியா் நிலை தடுமாறி, சாலையோரம் இருந்த கால்வாயில் விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 12:51 am IST

கூடுவாஞ்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தற்காலிக மின் ஊழியா் நிலை தடுமாறி, சாலையோரம் இருந்த கால்வாயில் விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

கூடுவாஞ்சேரி செங்கேணியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆகாஷ் (29). காயரம்பேடு மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றினாா். இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனா். அவா் சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாா்.

நெல்லிக்குப்பம் சாலை கோவிந்தராஜபுரம் அருகே வந்தபோது, நிலை தடுமாறி சாலையோரம் இருந்த கால்வாயில் விழுந்தாா். இந்த விபத்தில், பலத்த காயம் அடைந்த ஆகாஷை, அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஆகாஷை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா்.

கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் இவ்விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.