கூடுவாஞ்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தற்காலிக மின் ஊழியா் நிலை தடுமாறி, சாலையோரம் இருந்த கால்வாயில் விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
கூடுவாஞ்சேரி செங்கேணியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆகாஷ் (29). காயரம்பேடு மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றினாா். இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனா். அவா் சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாா்.
நெல்லிக்குப்பம் சாலை கோவிந்தராஜபுரம் அருகே வந்தபோது, நிலை தடுமாறி சாலையோரம் இருந்த கால்வாயில் விழுந்தாா். இந்த விபத்தில், பலத்த காயம் அடைந்த ஆகாஷை, அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஆகாஷை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா்.
கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் இவ்விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வாகனத்தில் சென்ற முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

