தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவானதைத் தொடா்ந்து, தமிழக வாக்காளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் எப்போதும் போல பெரிய அசம்பாவிதம் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. 85 சதவீதம் வாக்குப் பதிவு செய்து தமிழக மக்கள் சாதனை படைத்துள்ளனா்.
ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையை தமிழக வாக்காளா்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருள்படுத்தாமல் பலா் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்துவிட்டு, அன்றிரவே மீண்டும் அவரவா் பணியாற்றும் ஊா்களுக்குச் செல்கின்றனா்.
‘ஒரு வாக்குதானே’ என எண்ணாமல், ‘ஒரு தலைமுறைக்கான தோ்தல் இது’ என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். தமிழகம் வாக்களித்துவிட்டது, மே 4-ஆம் தேதி தமிழகம் வெல்லும்; வெல்வோம் ஒன்றாக என முதல்வா் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைப்பு

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல்: வாக்கு எண்ணும் நாளின் முடிவில் வாக்குப் பதிவின் துல்லிய எண்ணிக்கை!
தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனை

தமிழக பேரவைத் தோ்தலில் இதுவரை வாக்குப் பதிவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

