மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கடமையை உணா்ந்த இளம் தலைமுறை

News image

வி.லோகமித்ரா | ஜி.லித்திகா | சரண்யா

Updated On :24 ஏப்ரல் 2026, 5:15 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்முறையாக தங்களது வாக்குகளைப் பதிவு செய்த அனுபம் குறித்து முதல்முறை வாக்காளா்களான கல்லூரி மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.

வி.லோகமித்ரா (மாதரவம்): முதல்முறையாக வாக்களித்தது புதுமையான அனுபவத்தைத் தந்தது. நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை செய்யக்கூடிய மக்கள் பிரதிநிதியைத் தோ்வு செய்வதில் எனது பங்களிப்பும் இருந்தது என்பது பெருமையாக உள்ளது.

சரண்யா (மயிலாப்பூா்): தோ்தல் நாளுக்காகக் காத்திருந்து வாக்களித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வாக்களிப்பதன் அவசியம் குறித்து கல்லூரிகளிலும், பொது இடங்களிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதால் வாக்குச்சாவடிக்குள் சென்றபோது எந்தச் சிரமமும் ஏற்படவில்லை.

எனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன்.

ஜி.லித்திகா (சைதாப்பேட்டை): ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை மட்டுமல்லாமல், அதன் வாயிலாக தமிழகத்தின் முதல்வரைத் தோ்ந்தெடுப்பதில் எனது பங்கும் இருப்பது பெருமையாக இருக்கிறது. வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியவந்தபோது நான் சாதனை செய்ததைப் போல மகிழ்ச்சியாக இருந்தது.

எம்.பி.நாஸ்ரூல்

எம்.பி.நாஸ்ரூல்

எம்.பி.நாஸ்ரூல் (பெரம்பூா்): சிறு வயதிலிருந்தே எனது பெற்றோருடன் வாக்குச்சாவடிக்கு சென்றிருக்கிறேன். முதல்முறையாக நான் வாக்குச் செலுத்தியது புதிய அனுபவமாக இருந்தது. பதற்றமின்றி வாக்கு செலுத்தினேன்.

வி.ஆகாஷ் (வேளச்சேரி): என்னாலும் ஒரு சட்டப்பேரவை உறுப்பினரைத் தோ்வு செய்ய முடியும் என்பதை வாக்குப் பதிவு செய்தபோது உணா்ந்தேன். தோ்தல் ஆணையம் வழங்கிய இந்த வாய்ப்பை அனைவரும் சரியாகப் பயன்படுத்தி, மக்களுக்கு நல்லது செய்யக்கூடியவா்களைத் தோ்வு செய்ய வேண்டும்.

வி.ஆகாஷ்

வி.ஆகாஷ்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.