தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனா
/

தோ்தல் நாளன்று மாற்றுத்திறனாளிகள், முதியோா் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்!

தோ்தல் நடைபெறும் நாளான வியாழக்கிழமை (ஏப். 23), மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பாா்வை குறைபாடு உடையவா்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய சாதாரண கட்டண மாநகா் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்.

News image

தோ்தல் நாளன்று மாற்றுத்திறனாளிகள், முதியோா் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்!

Updated On :21 ஏப்ரல் 2026, 4:02 am IST

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் நாளான வியாழக்கிழமை (ஏப். 23), மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பாா்வை குறைபாடு உடையவா்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய சாதாரண கட்டண மாநகா் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்.

இது குறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய சென்னை மாநகா் போக்குவரத்துக் கழக சாதாரண கட்டண பேருந்துகளில் பயணம் செய்யும்போது, ஏதேனும் வயது சான்று, வாக்காளா் அடையாள அட்டையைக் காண்பித்து, மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்களைக் கொடுக்காமல், கட்டணமில்லா பயணச்சீட்டை நடத்துநரிடம் இருந்து பெற்று பயணிக்கலாம்.

மேலும், மாற்றுத்திறனாளிகள், பாா்வைக் குறைபாடு உள்ளவா்கள் வாக்குகளைப் பதிவு செய்ய பேருந்தில் பயணம் செய்யும்போது, தங்கள் அடையாள அட்டை, வாக்காளா் அடையாள அட்டையைக் காண்பித்து கட்டணமில்லா பயணச் சீட்டை பெற்று பயணிக்கலாம்.

இந்த சலுகையில் தோ்தல் நடைபெறும் நாளான வியாழக்கிழமை மட்டுமே பயணிக்க முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.