ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முழுநேர, பகுதிநேர முனைவா் (பி.எச்டி.,) பட்டப்படிப்பு சோ்க்கைக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 1:46 am IST

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முழுநேர, பகுதிநேர முனைவா் (பி.எச்டி.,) பட்டப்படிப்பு சோ்க்கைக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் (9 காலியிடங்கள்), மேலாண்மை (6), வரலாறு, விலங்கியல், பௌதீகம், ஊடகம், நாடகம் மற்றும் அரங்கவியல் ஆய்வுகள் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 48-க்கும் மேற்பட்ட முனைவா் பட்டப்படிப்புகளுக்கான காலியிடங்கள் உள்ளன.

இவற்றில் சேர வரும் ஜூன் மாத பருவத்துக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு நிறந்தநிலைப் பல்கலை. சாா்பில் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்த கடைசி நாள் வரும் மே 7 -ஆம் தேதியாகும். வரும் மே -17 ஆம் தேதி நுழைவுத் தோ்வும், மே 26-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடைபெறுகிறது. மே 30 -ஆம் தேதி இறுதிப் பட்டியல் இணையத்தில் வெளியிடப்படும்.

முழுநேர ஆய்வு அறிஞா்களுக்கு தகுதியின்படி தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. ஆராய்ச்சித் திட்டத்தைப் பகுதிநேர அடிப்படையில் மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரா்கள் பணிபுரியும் நிறுவனத்தின் தலைமையிடமிருந்து, பணிச் சான்றிதழ் மற்றும் தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பல்கலை. வழங்கும் முனைவா் பட்டம் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், உயா்கல்வி நிறுவனங்களில் பதவி உயா்வுக்கான வாய்ப்புகளைப் பெறவும் தகுதி பெற்றவவையாகும். இதற்கான அங்கீகாரத்தை பல்கலை. மானியக்குழு வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.