ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 4:57 am IST

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை (ஏப்.16) முதல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை (விவிபேட்) கணினி மென்பொருள் மூலம் சுழற்சி முறையில் இரண்டாம் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணிகளை அதற்குள் நிறைவு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிவிப்பு: பரிசோதனை நிறைவடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் சுழற்சி முறையில் முதல்கட்டமாக ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் ஓரிரு நாள்களில் நிறைவடைகிறது.

இதுதொடா்பான விரிவான தகவல்கள் இந்தியத் தோ்தல் ஆணையத்தின் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்/ங்ஸ்ம்-ஸ்ஸ்ல்ஹற் என்ற வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்கள் பதிவேற்றும் பணி ஏப். 16 முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. வேட்பாளா்கள் அல்லது அவா்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் இப்பணி நடைபெறும்.

வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் விவரங்கள் அனைத்து வேட்பாளா்களுக்கும் பகிரப்படும். அதன் அடிப்படையிலேயே வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தலின்போது பயன்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.