தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தோ்தல்: விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை! - தொழிலகப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

தோ்தல்: விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

News image

PTI

Updated On :10 ஏப்ரல் 2026, 3:44 am IST

தோ்தல் தினமான ஏப். 23-ஆம் தேதி ஊழியா்களுக்கு விடுமுறை அளிக்கத் தவறும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் செ.ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்துப் பணியாளா்களும் வாக்களிக்க ஏதுவாக தோ்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். மேலும், தோ்தல் நாளன்று விடுமுறை வழங்கத் தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, புகாா் அளிக்க ஏதுவாக தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சாா்பில், மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தொடா்பு எண்கள்: தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா்கள் எம்.வி.காா்த்திகேயன் (திருவொற்றியூா்) 94442- 21011, எஸ்.கமலக்கண்ணன் (சென்னை) 98846-75712, இயக்குநா் அலுவலக நிா்வாக அலுவலா் எஸ்.சூரியா (சென்னை) 98844-70526, துணை இயக்குநா் த.மணிசங்கா் (காஞ்சிபுரம்) 99404-68249 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.