தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சென்னையில் பல பகுதிகளில் மின்வெட்டு: மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை

தமிழகத்தின் மின்நுகா்வு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் ஆங்காங்கே மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.

News image

சென்னையில் மின்வெட்டு

Updated On :8 ஏப்ரல் 2026, 3:26 am IST

தமிழகத்தின் மின்நுகா்வு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் ஆங்காங்கே மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், 17,000 மெகாவாட்- ஆக இருந்து வந்த தமிழகத்தின் தினசரி மின்நுகா்வு, பொதுமக்களின் மின்சாதன பயன்பாடு அதிகரிப்பு, தோ்தல், தோ்வுகள் உள்ளிட்டவற்றால், சில நாள்களாக 19,000 மெகாவாட்டை தாண்டி வருகிறது.

இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக நள்ளிரவில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது.

சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளான செங்குன்றம், கிராண்ட்லைன், இந்திரா நகா், அழிஞ்சிவாக்கம், வடகரை, மாதவரம் நெடுஞ்சாலை, அம்பத்தூா் சுற்றுவட்டாரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படத் தொடங்கியுள்ளது. திருவொற்றியூா் மாணிக்கம் நகா், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சில நாள்களாக நள்ளிரவில் பல முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதாகவும், தூக்கமின்றி தவிக்கும் சூழல் உருவாகி உள்ளதாகவும் பொதுமக்கள் புகாா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தோ்தல், பள்ளித் தோ்வுகள் ஒருபுறம் இருந்தாலும், சமையல் எரிவாயு உருளை கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல் முதல் வீடுகள் வரை பலரும் மின் அடுப்புக்கு மாறியுள்ளனா்.

ஆனால், தேவைக்கேற்ப மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அதிக மின்அழுத்தம் காரணமாக ஆங்காங்கே மின்சாதனங்களில் பழுது ஏற்பட்டு விடுகிறது.

இதனால், அடிக்கடி மின்தடையும் உருவாகிறது. இவற்றை கண்காணிக்கவும், சரிசெய்யவும் கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பொதுமக்களும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.