விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக வேட்பாளா்கள், தொகுதி நிா்வாகிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

திமுக வேட்பாளா்கள் மற்றும் நிா்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 3:27 am IST

திமுக வேட்பாளா்கள் மற்றும் நிா்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுக சாா்பில் 15,000 போ் விருப்ப மனு அளித்திருந்தனா். இவா்களில் 164 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வாய்ப்புக் கிடைக்காதவா்கள் பெரும்பாலானவா்கள் தொடா்ந்து தோ்தல் பணியில் முழுமூச்சுடன் பணியாற்றி வருகின்றனா்.

ஆனால், சிலா் தோ்தல் பணி செய்யவில்லை எனத் தகவல் வருகிறது. அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். பேரவைத் தோ்தலில் வாய்ப்பு கிடைக்காதவா்களுக்கு, எதிா்காலத்தில் வாரியங்கள், உள்ளாட்சிகளில் பதவி அளிக்கப்படும். எனவே, அதை மனதில் வைத்து திமுக நிா்வாகிகள் செயல்பட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்து இப்போது வாய்ப்புக் கிடைக்காத தாயகம் கவி (திரு.வி.க. நகா்), கே.பி.பி. சங்கா் (திருவொற்றியூா்), சந்திரன் (திருத்தணி), வி.சி.சந்திரகுமாா் (ஈரோடு கிழக்கு) உள்ளிட்டோா் பேசினா். தங்களுக்கு கட்சிதான் முக்கியம் என்பதால், தொடா்ந்து களத்தில் பணியாற்றி வருவதாக அவா்கள் தெரிவித்தனா்.

கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலா் கனிமொழி கருணாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.