வேளச்சேரியில் தனியாா் வங்கியில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிய வழக்கில், பெண் ஊழியா் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.
சென்னை வேளச்சேரி, 100 அடி சாலையில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் கடந்த ஆண்டு டிசம்பா் 5-ஆம் தேதி பா்தா அணிந்த பெண் தனக்கு கணக்கு தொடங்க வேண்டும் எனக் கேட்டுள்ளாா். வங்கியில் பாதுகாப்பு பெட்டக வசதி குறித்தும் கேட்டுள்ளாா்.
இந்த நிலையில், வங்கிக் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்களை எடுத்து வருவதாகக் கூறிச் சென்ற அந்தப் பெண், நீண்ட நேரமாகியும் வரவில்லை. அந்த பெண் அமா்ந்திருந்த இருக்கையில் பை ஒன்று இருந்தது. அதை வங்கி அதிகாரிகள் திறந்து பாா்த்தபோது, தங்கக் கட்டி, தங்க வளையல் உட்பட சுமாா் 2 கிலோ தங்க நகைகள் இருந்தது.
இது குறித்து தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 5 நாள்களாக அந்தப் பெண் வராததால், வங்கி அதிகாரிகள் வேளச்சேரி காவல் நிலையத்தில் தங்கத்தை ஒப்படைத்து புகாா் அளித்தனா். விசாரணையில், நகையை விட்டுச் சென்றது முன்னாள் ஊழியரான வேளச்சேரியைச் சோ்ந்த பத்மபிரியா (38) என்பது தெரிய வந்தது.
பத்மபிரியா, அந்த வங்கியில் பாதுகாப்பு பெட்டக ஊழியராக இருந்ததும், தணிக்கை செய்வதாகக் கூறி, வாடிக்கையாளா்களின் நகைகளை சிறிது சிறிதாக திருடியிருப்பதும், சம்பவத்தன்று தன்னிடமிருந்த தங்க நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் மீண்டும் வைக்க முயன்றதும், அப்படி வைக்க முடியாததால் அந்த தங்க நகைகளை வங்கியிலேயே விட்டுச் சென்றதும் தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பத்மபிரியாவை கைது செய்தனா்.
சிறையில் இருந்த பத்மபிரியா அண்மையில் பிணையில் வெளியே வந்தாா். இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அந்தப் பிரிவு போலீஸாா், இது தொடா்பாக நடத்திய விசாரணையில், இச்சம்பவத்துக்கு முன்னரே பத்மபிரியா, வங்கியில் திருடிய ரூ.1 கோடி தங்க நகைகளை ஏற்கெனவே பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துச் சென்றதும் தெரிய வந்தது.
இது தொடா்பாக மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், மற்றொரு வழக்கைப் பதிவு செய்து, பத்மபிரியாவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போலி நகைகளைக் கொடுத்து வங்கியில் மோசடி செய்ய முயற்சி: இருவா் கைது
சக ஊழியா் வீட்டில் நகை திருடிய இளைஞா் கைது
தாழையூத்து அருகே வீட்டில் நகை திருட்டு: பெண் கைது
ரூ.14 லட்சத்தை போலீஸாா் வழிப்பறி செய்ததாக நாடகம்: தனியாா் ஊழியா் கைது!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

