மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் 8 புகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 3:29 am IST

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் 8 புகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு ரயில் நிலையப் பிரிவில் சென்னை எழும்பூரில் 10, 11- ஆவது நடைமேடையில் பராமரிப்புப் பணிகள் மற்றும் தொழில்நுட்பப் பணிகள் சனிக்கிழமை (ஏப். 4) முதல் 7-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படவுள்ளன.

இதையடுத்து, சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து அதிகாலை 4.15, இரவு 11, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில்களும், தாம்பரத்திலிருந்து இரவு 10.20, 11, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை நிலையம் செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல், ஏப். 4, 6, 7 ஆகிய தேதிகளில் கடற்கரையிலிருந்து காலை 5.50, இரவு 11.05 , 11.30, 11.59 ஆகிய மணிகளில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

பகுதியளவு ரத்து: ஏப். 5-ஆம் தேதி கடற்கரையிலிருந்து காலை 3.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் ரயில் தாம்பரத்துடன் நிறுத்தப்படும். மேலும், திருமால்பூரிலிருந்து இரவு 8 மணிக்கும், செங்கல்பட்டிலிருந்து இரவு 10.20, 11 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.