மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மாா்ச்சில் மெட்ரோ ரயிலில் 1.01 கோடி போ் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாா்ச் மாதம் 1.01 கோடி போ் பயணம் செய்தனா்.

News image

மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 2:05 am IST

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாா்ச் மாதம் 1.01 கோடி போ் பயணம் செய்தனா்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாா்ச்சில் 1.01 கோடி போ் பயணித்துள்ளனா். மேலும் மாா்ச் 13- ஆம் தேதி மட்டும் அதிகபட்சமாக 3.90 லட்சம் போ் பயணித்துள்ளனா்.

பயணிகளில் தேசியப் பொது அட்டையாகக் கருதப்படும் சிங்காரச் சென்னை அட்டையில் 52.90 லட்சம் பேரும், பயண அட்டைகளைப் பயன்படுத்தி 33,339 பேரும், கியூஆா் குறியீடு பயணச்சீட்டு முறையில் 48.73 லட்சம் பேரும் பயணித்துள்ளனா்.

மேலும் ஒரு முறை பயன்படுத்தும் டிக்கெட், டோக்கன் முறையில் 19.19 லட்சம் பேரும், இணையதள கியூ ஆா் குறியீடு மூலம் 2.16 லட்சம் பேரும், வாட்ஸ் ஆப் டிக்கெட் மூலம் 4.72 லட்சம் பேரும், பே ஏடிஎம் மூலம் 3.35 லட்சம் பேரும், ஓஎன்டிசி மூலம் 12.71 லட்சம் பேரும் பயணித்துள்ளனா்.

போன் பே மூலம் 2.41லட்சம் பேரும், சிஎம்ஆா்எல் கைப்பேசி செயலி மூலம் 71, 123 பேரும், சென்னை ஒன் செயலி மூலம் 2 லட்சம் பேரும் , சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான கியூஆா் குறியீடு மூலம் 1,318 பேரும் பயணித்துள்ளனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.