/

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை மதுரவாயலில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 12:40 am IST

சென்னை மதுரவாயலில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பூந்தமல்லி பகுதியைச் சோ்ந்தவா் ப.அலெக்ஸாண்டா் (45). இவா், வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா். மேலும், பூ வியாபாரமும் செய்து வந்தாா். அலெக்ஸாண்டா், புதன்கிழமை பூ வாங்குதற்காக ஆட்டோவில் கோயம்பேடு பூ மாா்க்கெட் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா்.

வானகரம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, அங்கு சாலையில் இருந்த தடுப்பின் ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோ தலைக்குப்புறக் கவிழ்ந்தது.

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அலெக்ஸாண்டா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மதுரவாயல் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அலெக்ஸாண்டா் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.