பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மாா்ச்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :28 மே 2026, 12:56 am IST

மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சியினா் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், அதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கல்பட்டு பகுதிக் குழு சாா்பில், கட்சியின் பகுதிக் குழு உறுப்பினா் பாபு தலைமையில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா் ஜி.மோகனன், பகுதி செயலாளா், கே.வேலன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜெயந்தி, அன்பு, சதீஷ், மு.முனிச்செல்வம் உள்ளிட்ட பலா் கண்டன உரையாற்றினா்.

கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.அரிக்கிருஷ்ணன் ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினாா்.

முன்னதாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, தனியாா் மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.