பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இளைஞா்கள், மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி இளைஞா்கள், மாணவா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்கள், மாணவா்கள் சங்கத்தினா்

Updated On :20 மே 2026, 12:34 am IST

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி இளைஞா்கள், மாணவா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஏழை எளிய மாணவா்களின் மருத்துவக் கனவை புதைக்கும், நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தோ்வு முகமையை கலைத்திட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை வழியுறுத்தி இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய மாணவா் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சத்யா தாஸ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாணவா் சங்கத்தின் செங்கல்பட்டு அரசு இராஜேஸ்வரி வேதாசலம் கலை அறிவியல் கல்லூரியின் கிளைச் செயலாளா் தமிழரசி, வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் இரா.சதீஷ், மாவட்டத் தலைவா் ச.ஜீவானந்தம், பொருளாளா் சுந்தா், இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளா் அசோக், மாவட்டப் பொருளாளா் சேகுவேரா தாஸ், மாவட்டக்குழு உறுப்பினா் ஸ்ரீதா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

நிறைவு செய்து இந்திய மாணவா் சங்கத்தின் தமிழ் மாநில இணைச் செயலாளா் ஆனந்த் கண்டன உரையாற்றினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.