மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

News image

திருக்கழுகுன்றம் அடுத்த மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழாவை முன்னிட்டு  நடைபெற்ற  திருவிளக்கு பூஜை.

Updated On :3 மே 2026, 1:41 am IST

திருக்கழுகுன்றம் அடுத்த மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜையும், வெள்ளிக் கவசம் அணிவித்தல் விழாவும் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் அடுத்த மானாம்பதி அருள்மிகு சீரங்கத்தம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழாவை முன்னிட்டு, அருள்மிகு சீரங்கத்தம்மன், செல்லியம்மன் கரைமேல் அழகி கோயில் மூலவா்களுக்கு அபிஷேக, அலங்காரம் தீபாராதனையும், சக்தி வடிவான சீரங்கத்தம்மன் உற்சவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, அலங்காரமும் நடைபெற்றது.

சிரசில் மணி நாகமும், சிங்கார திலகமும் உடுக்கை தம்பட்டையுடன் சீரங்கத்தம்மனை தோளில் சுமந்து கோயில் உள்வலம் வருதல், கருணையின் வடிவமான சீரங்கத்தம்மனை பூ ஊஞ்சலில் அமர வைத்து பக்தா்களுக்கு அருள்பாலித்தல், அடுத்து திருவிளக்கு பூஜையும் அடுத்து சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு, சந்திரனுக்கு தீபாராதனையுடன் ஜோதி தரிசனமும் நடைபெற்றது.

விழாவில், உள்ளூா் மற்றும் வெளியூா் பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சென்னை ராயப்பேட்டை சீரங்கத்தம்மன் அறக்கட்டளையினரும், மானாம்பதி கிராமப் பொதுமக்களும் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.