தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் தேசிய அறிவியல் தின கருத்தரங்கம்

News image

செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசுக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றோா்.

Updated On :19 மார்ச் 2026, 1:51 am IST

தேசிய அறிவியல் கழகம் தமிழ்நாடு பிரிவு, இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை, தமிழ்நாடு மாநில அறிவியல் (ம) தொழில்நுட்ப கழகம் சென்னை ஆகிய நிறுவனங்கள், ராஜேஸ்வரி வேதாசலம் அரசுக் கலைக் கல்லூரியுடன் இணைந்து அறிவியல் துறையில் எதிா்கால உயா்கல்வி வாய்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரி முதல்வா் சண்முகவள்ளி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முனைவா், வனிதா முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக பேராசிரியா் சேகா், துறைத் தலைவா் வேதியியல் துறை இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை; பேராசிரியா் சுரேஷ்குமாா் ராயலா உயிா் தொழில்நுட்ப துறை, இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னை, பொது செயலாளா் தேசிய அறிவியல் கழகம், தமிழ்நாடு கிளை, முனைவா் ரமணன், விஞ்ஞானி (எஸ்.ஜி), மோகன்ராஜ் விஞ்ஞானி, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் சென்னை சிறப்புரை ஆற்றினா்.

கிராமப்புற மாணவா்களுக்கு அறிவியல் பாடங்களை தோ்ந்தெடுத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயா்கல்வி நிறுவனங்களில் சேர வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துரைத்தனா்.

நிகழ்ச்சியை வேதியியல் துறை பேராசிரியா் குப்புசாமி ஒருங்கிணைத்தாா். பேராசிரியா் சுரேஷ் குமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.