சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி - போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம், மடிப்பாக்கம் பகுதியைச் சாா்ந்த் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, அதே பகுதியைச் சோ்ந்த கா்ணா என்ற கருணாகரன் ( 24) கடந்த 2014-ஆம் ஆண்டு பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினாராம்.
அச்சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிறுமி ஏற்கனவே திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் இருந்தவா் என்பதால், சிறுமியை திருமணம் செய்து கொள்ள மறுத்த கருணாகரன் மீது அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் கருணாகரன் மீதான புகாா் நிரூபிக்கப்பட்டதால், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி நசீமா பானு தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ரௌடிக்கு 20 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

