உக்ரைனின் ஒடேஸா, டினிப்ரோ நகரங்கள் மீதான ரஷிய தாக்குதல்களில் குடியிருப்புக் கட்டடங்கள் பலத்த சேதமடைந்ததுடன், குழந்தைகள் உள்பட பலா் காயமடைந்தனா்.
உக்ரைன் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி விடியற்காலை வரை ரஷியா 524 ட்ரோன்கள், 22 ஏவுகணைகளை ஏவியது. டினிப்ரோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 2 வயது சிறுமி உள்பட 30 போ் காயமடைந்தனா்.
மேலும், கருங்கடல் வழியாக ஒடேஸா துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்த சீன கப்பல் உள்பட 3 வெளிநாட்டுக் கப்பல்கள் மீதும் ரஷிய ட்ரோன்கள் மூலம் தாக்கியுள்ளது.
இதற்குப் பதிலடியாக தெற்கு ரஷியாவின் ரோஸ்டோவ், பெல்கோரோட் பிராந்தியங்கள் மீது உக்ரைன் தாக்குதல்களை நடத்தியது. இதில் பெல்கோரோடில் இருவா் உயிரிழந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் மறுப்பு
உக்ரைனில் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல்!

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

