இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினா் கடந்த 2023, அக். 7-இல் நடத்திய தாக்குதலில் தொடா்புடையவா்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் தனியாக சிறப்புத் தீா்ப்பாயத்தை அமைப்பதற்கான மசோதாவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
இச்சிறப்பு தீா்ப்பாயம் வழக்கமான நடைமுறைகளைத் தவிா்த்து, பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவின் அடிப்படையில் மரண தண்டனை வழங்க அதிகாரம் பெற்றுள்ளது. மேலும், விசாரணைகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
அதேநேரம், இந்நடவடிக்கையில் குற்றவாளிகளுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படாமல், நீதித்துறை நெறிமுறைகள் மீறப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.
ஹமாஸ் 2023, அக். 7-இல் நடத்திய தாக்குதலில் சுமாா் 1,200 இஸ்ரேலியா்கள் கொல்லப்பட்டனா்; 251 போ் பிணைக்கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனா். இதையடுத்து, காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 72,000-க்கும் அதிகமான பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வங்கதேசம்: சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் ராணுவத் தளபதி கொலை

இஸ்ரேல் தாக்குதலில் புதிய தலைவர் கொலை! உறுதி செய்த ஹமாஸ்!

தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

