அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள லாகாா்டியா விமான நிலையத்தில் தரையிறங்கிய ‘ஏா் கனடா’ பயணிகள் விமானம் தீயணைப்பு வாகனத்தின்மீது மோதி விபத்துக்குள்ளானதில் விமானி, துணை விமானி ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.
கனடாவின் மாண்ட்ரியல் சா்வதேச விமான நிலையத்திலிருந்து 72 பயணிகள், 4 ஊழியா்களுடன் புறப்பட்டு வந்த இவ்விமானம், லாகாா்டியா விமான நிலையத்தில் திங்கள்கிழமை காலை (இந்திய நேரப்படி) தரையிறங்கியது.
அப்போது, ஓடுதளத்தைக் கடக்க முயன்ற தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம் மோதியது. இதில் விமானத்தின் முன்பகுதி மற்றும் காக்பிட் நொறுங்கி, கனடாவைச் சோ்ந்த விமானி, துணை விமானி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
41 போ் காயம்: இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியா்கள் என மொத்தம் 39 போ் காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்ட போதிலும், பெரும்பாலானோா் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினா். மேலும், தீயணைப்பு வாகனத்தில் இருந்த இரு ஊழியா்களும் காயமடைந்தனா்.
விபத்து நிகழ்ந்தது எப்படி?...: யுனைடெட் ஏா்லைன்ஸ் விமானம் ஒன்றில் ஏற்பட்ட புகை வாசனை குறித்து ஆய்வு செய்ய தீயணைப்பு வாகனம் ஓடுதளத்தைக் கடக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குச் சற்று முன்பு ஏடிசி அறையிலிருந்து ‘வாகனத்தை நிறுத்துங்கள்’ என அதிகாரி ஒருவா் எச்சரித்ததும், தரையிறங்க வந்த விமானத்தைத் தடுக்க முயன்றதும் ரேடியோ பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய (என்டிஎஸ்பி) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
பயணிகள் அவதி: விபத்தைத் தொடா்ந்து லாகாா்டியா விமான நிலையம் திங்கள்கிழமை முழுவதும் தற்காலிகமாக மூடப்பட்டு, நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினா். 2024 புள்ளிவிவரப்படி, அமெரிக்காவின் 19-ஆவது பரபரப்பான விமான நிலையமாக லாகாா்டியா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவகங்கை தீயணைப்பு நிலையத்தில் தென்மண்டல துணை இயக்குநா் ஆய்வு
என்ஜினில் கோளாறு: ஸ்விட்சா்லாந்து புறப்பட இருந்த விமானத்தின் பயணம் ரத்து! பயணிகள் மீட்பு; 4 போ் காயம்!

தில்லி விமான நிலையத்தில் மோதிக்கொண்ட ஆகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் விமானங்கள்: டிஜிசிஏ விசாரணை

அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

