தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வரலாற்றில் முதல்முறை..! ஈரான் தாக்குதலில் சிக்கிய அமெரிக்க எஃப் - 35 விமானம்!

ஈரான் தாக்குதலில் சிக்கிய அமெரிக்க எஃப் - 35 விமானம் பற்றி...

News image

எஃப்-35 - AP

Updated On :20 மார்ச் 2026, 10:29 am IST

உலக நாடுகளில் முதல்முறையாக அமெரிக்காவின் எஃப் - 35 ரக போர் விமானத்தை தாக்கியிருப்பதாக ஈரான் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தொடங்கி 20 நாள்களை கடந்துள்ளது.

ஈரானுடனான போரில் முக்கிய திருப்பமாக அந்நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவின் மீது கடந்த வாரம் மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா நடத்தியது.

மேலும், ஈரானில் உள்ள எண்ணெய் வயல் மீது புதன்கிழமை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி நிலையத்தை ஈரான் தாக்கியது. வளைகுடா நாடுகளின் பல்வேறு எரிபொருள் கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், அமெரிக்க விமானப் படையின் அதிநவீன 5 ஆம் தலைமுறை போர் விமானமான எஃப் - 35 லைட்னிங் 2 -வை வியாழக்கிழமை ஈரான் தாக்கியதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை வெளியிட்ட அறிக்கையில், மத்திய ஈரான் வான்வெளியில் பறந்த அமெரிக்காவின் எஃப் - 35 ஸ்டெல்த் போர் விமானத்தை உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 2:50 மணிக்கு அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தாக்கினோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தாக்குதலுக்குள்ளான எஃப் - 35 விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், விமானி பாதுகாப்பாக இருப்பதாகவும் சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலகின் முதன்மை போர் விமானமாக இருக்கும் எஃப் - 35, எதிரிகளால் தாக்க முடியாத மின்னல் வேகத்தில் பயணிக்கக் கூடியது எனப் பெயர் பெற்றது. இந்த விமானத்தை 19 நாடுகள் கொள்முதல் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், எஃப் - 35 ரக போர் விமானத்தை தாக்கிய முதல் நாடு நாங்கள்தான் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

சில நாள்களுக்கு முன்னதாக, அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஆபிரகாம் லிங்கனை தாக்கியதாக ஈரான் அறிவித்ததற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

For the first time in history..! An American F-35 aircraft attacked by Iran!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.