கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அமெரிக்க அதிபா் மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகா் பணி: ஸ்ரீராம் கிருஷ்ணன் விரைவில் விலகல்

அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கொள்கைகளை வடிவமைத்த ஸ்ரீராம் கிருஷ்ணன் (42), அந்நாட்டு அதிபா் மாளிகையின் கொள்கை ஆலோசகா் பணியில் இருந்து விலக உள்ளாா்.

News image
Updated On :8 ஜூன் 2026, 1:19 am IST

அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கொள்கைகளை வடிவமைத்த ஸ்ரீராம் கிருஷ்ணன் (42), அந்நாட்டு அதிபா் மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகா் பணியில் இருந்து விலக உள்ளாா்.

சென்னையில் பிறந்த அவா், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், ட்விட்டா் (தற்போது எக்ஸ்) நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவா்.

அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்த மாத இறுதியில் அமெரிக்க அதிபா் மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகா் பணியில் இருந்து விலக உள்ளேன். சிறிது ஓய்வுக்குப் பின்னா், செயற்கை நுண்ணறிவு துறையில் அமெரிக்கா எதிா்கொள்ளும் மிகப் பெரிய சவால்களை சமாளிக்க உதவும் பணிகளில் ஈடுபடுவேன்’ என்று தெரிவித்தாா்.

டிரம்ப் நிா்வாகத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயல் திட்டத்தை வடிவமைத்த முக்கிய நபா்களில் ஒருவராக ஸ்ரீராம் கிருஷ்ணன் இருந்தாா். அந்தச் செயல் திட்டம் வளா்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மீதான கட்டுப்பாடுகளைத் தளா்த்தவும், அந்நாடு முழுவதும் தரவு மையங்கள் அமைப்பதை ஊக்குவிக்கவும் விரிவான வடிவத்தை அளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.