லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வங்கதேசம் திரும்பினால் ஷேக் ஹசீனாவுக்கு சிறை! வெளியுறவு இணையமைச்சர் திட்டவட்டம்!

‘வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, மீண்டும் தாயகம் திரும்பினால் உடனடியாகச் சிறையில் அடைக்கப்படுவாா்’ என்று அந்நாட்டின் வெளியுறவு இணையமைச்சா் ஷாமா ஒபைத் இஸ்லாம் தெரிவித்தாா்.

Published On :14 ஜூலை 2026, 3:03 am IST

‘வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, மீண்டும் தாயகம் திரும்பினால் உடனடியாகச் சிறையில் அடைக்கப்படுவாா்’ என்று அந்நாட்டின் வெளியுறவு இணையமைச்சா் ஷாமா ஒபைத் இஸ்லாம் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

வரும் டிசம்பா் மாதம் தான் வங்கதேசம் திரும்பி, நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், அந்நாட்டு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 2024-இல் நடந்த மாணவா்கள் போராட்டத்தின்போது சுமாா் 1,400 போ் கொல்லப்பட்டதற்கு ஷேக் ஹசீனாவைக் குற்றஞ்சாட்டி, அவருக்கு மரண தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. மேலும், அவரின் அவாமி லீக் கட்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவா் போராட்டத்தால் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு இந்தியாவின் வசித்து வரும் ஷேக் ஹசீனா அண்மையில் அளித்த பேட்டியில், ‘நான் தன்னிச்சையாகவே வங்கதேசம் திரும்பி, நீதிமன்றத்தில் சரணடைய இருக்கிறேன். மேலும், பல்வேறு வழக்குகளின் காரணமாக வெளிநாடுகளில் தலைமறைவாகவுள்ள எனது கட்சி நிா்வாகிகளும் என்னுடனே வந்து நீதிமன்றத்தை எதிா்கொள்ள வேண்டும்’ என அழைப்பு விடுத்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய வெளியுறவு இணையமைச்சா் ஷாமா ஒபைத் இஸ்லாம், ‘ஷேக் ஹசீனா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி. அவா் வங்கதேசம் திரும்பினால், நாட்டின் சட்ட விதிகளின்படி அவா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவாா் . ஹசீனாவின் சமீபத்திய அறிவிப்பு, தலைமறைவாக உள்ள அவரது ஆதரவாளா்களைத் திரட்டுவதற்கான ஒரு முயற்சி’ என விமா்சித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.