ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!

வான்வழியை பகுதியளவு மீண்டும் திறக்க முடிவு...

News image

ஈரான் வான்வழி - DPS

Updated On :18 ஏப்ரல் 2026, 2:06 pm IST

ஈரானில் போர் பதற்றம் காரணமாக கடந்த ஏழு வாரங்களாக மூடப்பட்டிருந்த வான்வழியை பகுதியளவு மீண்டும் திறப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக அரசுக்குச் சொந்தமான ஈரான் நாளிதழின் தகவலின்படி,

கிழக்கு ஈரானின் மீதானா வான்வழிப் பாதைகள் காலை 7 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டின் விமான நிலையங்களில் விமானச் சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கும். ஆனால், அதற்கான காலக்கெடுவை குறிப்பிடவில்லை.

முன்னதாக, பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் - இஸ்ரேலும் கூட்டாக இணைந்து ஈரானின் மீது தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, ஈரானின் வான்வழி மூடப்பட்டிருந்தது.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போர்நிறுத்தம் அமலுக்கு வந்து ஒரு வாரத்திற்கும் மேலான நிலையில், இந்த பகுதியளவு வான்வழித் திறப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Summary

Iran on Saturday announced a partial reopening of its airspace after a seven-week hiatus because of the war, state media reported.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.