
திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் தாலுக்காவில் வடுகக்குடி வட்டத்தில் வள்ளலார் கோவில் பத்து என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள திடல் சேரியில் பெரிய பழைமையான சிவன் ஆலயம் இருந்ததற்கான அடையாளத்தை கிராம மக்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு, இப்பகுதியை சுத்தம் செய்தபோது கண்டறிந்தனர்.
அங்கு சிவபெருமானின் அருள் திருமேனியாகிய சிவலிங்கம் மட்டும் முட்புதர்களுக்கு இடையே காட்சிதந்தது. பக்தர்கள் கீற்றுக்கொட்டகை ஒன்றை அமைத்து சங்கர நாராயண சுவாமி என்ற திருநாமத்துடன் வழிபடத் தொடங்கினர். தொடர்ந்து சில அன்பர்களின் உதவியால், கடந்த ஜூலை 2013 ஆம் ஆண்டு பூமி பூஜை செய்து திருப்பணி வேலைகள் துவங்கப்பட்டது. போதிய நிதி வசதியில்லாததால் திருப்பணி வேலைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த திருப்பணியில் பக்தர்கள் பங்கேற்று இறைவனின் அருளைப் பெறலாம். (திருவாரூரிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் திருப்பாம்பரம் அருகில் உள்ளது திடல்சேரி)
தொடர்புக்கு: 98429 51504.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


தில்லி பெருந் திட்டம் 47 இன் கீழ் தில்லியின் பரந்த சாலைகளில் அதிகளவிலான வணிக நடவடிக்கைக்கு திட்டம்

தில்லியில் 1700-க்கும் மேற்பட்டவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு: அமைச்சா் பங்கஜ் குமாா் சிங்




