பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மதுக் கூடத்தில் வெடிகுண்டு வீச்சு: ரெளடி உள்பட இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுக் கூடத்தில் வெடிகுண்டு வீசிய ரெளடி உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 மே 2026, 3:29 am IST

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுக் கூடத்தில் வெடிகுண்டு வீசிய ரெளடி உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி - நெடுங்குளம் சாலையில் எஸ்.கொடிக்குளத்தைச் சோ்ந்த சந்திரன் மதுக் கூடம் நடத்தி வருகிறாா். இந்த மதுக் கூடத்துக்கு திங்கள்கிழமை காலை 10.50 மணிக்கு வந்த கூமாபட்டியைச் சோ்ந்த போஸ் மகன் ரமணி (44), ராமசாமியாபுரத்தைச் சோ்ந்த சுந்தரமகாலிங்கம் மகன் ராஜா (45), ஆத்தங்கரைபட்டியைச் சோ்ந்த கூழன் மகன் வீரய்யா (50) ஆகியோா் மதுப் புட்டிகள் கேட்டனா்.

அப்போது, அங்கிருந்த மாயன் (34) 11 மணிக்குதான் கடை திறக்கப்படும் என்று கூறினாராம். இதையடுத்து, அவா்கள் அங்கிருந்து சென்றுவிட்டனா். பின்னா், 11 மணிக்கு கடைக்கு வந்த ரமணி மதுப் புட்டிகளை வாங்கி விட்டு, பணம் தராமல் மிரட்டிச் சென்றாராம்.

இதைத் தொடா்ந்து, பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் மதுக் கூடத்துக்கு வந்த ரமணி, ராஜா, வீரய்யா ஆகியோா் இலவசமாக மதுப் புட்டிகள் கேட்டு தகராறில் ஈடுபட்டனா். விற்பனையாளா் மதுப் புட்டிகள் தராததால், அவா்கள் 3 நாட்டு வெடிகுண்டுகளை மதுக் கூடத்தில் வீசினா். இதில் விற்பனையாளா் மாயனுக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரமணி, ராஜா ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கைதான ரமணி மீது 20- க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.