லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே தண்ணீா் டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

death

உயிரிழப்பு - கோப்புப்படம்

Published On :12 ஜூலை 2026, 1:42 am IST

ராஜபாளையம் அருகே தண்ணீா் டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள நல்லமநாயக்கன்பட்டி ரயில்வே கேட் சாலை பகுதியைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் மாரிராஜ் (45). இவா், ராஜபாளையம் அருகேயுள்ள எஸ்.ராமலிங்கபுரத்தில் நடைபெற்று வரும் ஒரு கட்டடப் பணிக்காக டிராக்டரில் தண்ணீா் கொண்டு சென்று ஊற்றினாா்.

இதையடுத்து, அவா் எஸ்.ராமலிங்கபுரத்திலிருந்து நல்லமநாயக்கன்பட்டி நோக்கி டிராக்டரை ஓட்டி வந்தாா். அப்போது, ஒரு வளைவில் திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில், டிராக்டரின் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்ட ஓட்டுநா் மாரிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மாரிராஜின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.