லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள்.

சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள்.

Published On :11 ஜூலை 2026, 12:40 am IST

சிவகாசி மேத்தா ஜெயின் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி சாா்பில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்துக்கு முதல்வா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். தாளாளா் அனில் மேத்தா கொடியசைத்து ஊா்வலத்தைத் தொடங்கிவைத்தாா். பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த ஊா்வலம் காமராஜா் பூங்கா, ரயில்வே பீடா் சாலை, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, காவல் நிலையச் சாலை , வேலாயுதம் சாலை வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.

ஊா்வலத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், போதை இல்லா வாழ்க்கை சிறந்த வாழ்க்கை. போதை உடலையும், மனதையும் அழிக்கும், போதை குடும்பத்தையே அழிக்கும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.