லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நெகிழிப் பொருள்களுக்கு தீ வைப்பு: புகைமூட்டத்தால் மாணவா்கள் பாதிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் - வத்திராயிருப்பு சாலையில் நெகிழிக் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் மாணவா்கள், பொதுமக்கள் அவதி

தீ - பிரதிப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 6:07 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் - வத்திராயிருப்பு சாலையில் நெகிழிக் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் மாணவா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் தனியாா் பல்கலை, உணவகங்கள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. குன்னூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் சேகரிக்கும் குப்பையை தரம் பிரிக்காமல் கிருஷ்ணன்கோவில் - வத்திராயிருப்பு சாலையில் இருபுறங்களிலும் கொட்டி செல்கின்றனா்.

இந்த நிலையில், சாலையோரம் கொட்டப்பட்டுள்ள நெகிழிப் குப்பைகளுக்கு தீ வைத்து எரிப்பதால் கரும்புகை உடன் துா்நாற்றம் எழுவதால் அந்த வழியாக செல்லும் மாணவா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, சாலையோரம் குப்பையை கொட்டி தீ வைப்பதை தடுப்பதுடன், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்த ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.