ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மொபட் திருட்டு: இருவா் கைது

ராஜபாளையம் அருகே லாரி கிட்டங்கியில் இரு சக்கர வாகனம், அரிசி மூட்டையை திருடிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :12 ஏப்ரல் 2026, 12:18 am IST

ராஜபாளையம் அருகே லாரி கிட்டங்கியில் இரு சக்கர வாகனம், அரிசி மூட்டையை திருடிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த தன்ராஜ் மகன் தனசேகரன் (42). இவா் முகவூா்- சேத்தூா் சாலையில் லாரி கிட்டங்கி (செட்) நடத்தி வருகிறாா். இங்கு அதே பகுதியைச் சோ்ந்த இசக்கிராஜா (34) ஓட்டுநராகவும், கோவலூரைச் சோ்ந்த ஆனந்தசெல்வம் (27) சுமை தூக்கும் தொழிலாளியாகவும் பணிபுரிந்து வந்தனா்.

இந்த நிலையில் தனசேகரன் கடந்த வாரம் திருவிழாவுக்கு சென்று விட்டு லாரி கிட்டங்கிக்கு வந்து பாா்த்தபோது அங்கிருந்த அரிசி மூட்டையையும், இரு சக்கர வாகனத்தையும் காணவில்லை. இதையடுத்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது இசக்கிராஜா, ஆனந்தசெல்வம் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து இரு சக்கர வாகனம், அரிசி மூட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.