லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! (ஜூலை 31)

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...

Gold prices

தங்கம், வெள்ளி விலை நிலவரம் - PTI

Published On :31 ஜூலை 2026, 11:02 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 106,040-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.

அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வரும் நிலையில், நாட்டில் தங்கத்தின் விலை தொடா்ந்து ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 106,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதன்பிறகு, ஒரு சவரன் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ. 105,720-க்கும், புதன்கிழமை ரூ. 105,240-க்கும், வியாழக்கிழமை ரூ. 105,840 என விற்பனையாகி வந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ. 200 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 13,255-க்கும், ஒரு சவரன் ரூ. 106,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 235-க்கும், ஒரு கிலோ ரூ. 2,35,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Summary

Today july 31 Gold and Silver Rate in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.