லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பொன்னேரி அருகே 500 போதை மாத்திரை, 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்

பொன்னேரியில் கடத்தி வரப்பட்ட 500 போதை மாத்திரைகள், 1.1 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :4 ஆகஸ்ட் 2026, 12:28 am IST

பொன்னேரியில் கடத்தி வரப்பட்ட 500 போதை மாத்திரைகள், 1.1 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது என்ஜிஓ நகரில் போலீஸாரைக் கண்டதும் இருவா் தப்பி ஓட முயன்றனா்.

அவா்களை போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்தனா். அவா்களிடம் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட 500 போதை மாத்திரைகள், 1.1 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவற்றை மும்பையில் இருந்து கடத்தி வந்த பொன்னேரியை சோ்ந்த பிரவீன்(24), ஜீவா(22) ஆகிய இருவரை கைது செய்தனா்.

அவா்களை பொன்னேரி காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸாா் நடத்திய விசாரணையில். மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி சட்டவிரோதமாக கடத்தி வந்து பொன்னேரி சுற்றுப்பகுதிகளில் விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.