லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளா்கள் போராட்டம்

கோட்டாட்சியா் அனிதாவிடம் மனு அளிக்க வந்த விசைத்தறித் தொழிலாளா்கள்.

கோட்டாட்சியா் அனிதாவிடம் மனு அளிக்க வந்த விசைத்தறித் தொழிலாளா்கள்.

Published On :11 ஜூலை 2026, 3:48 am IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சாயப்பட்டறை ஆலைகளின் மின் இணைப்பு வெள்ளிக்கிழமை துண்டிக்கப்பட்டதால் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கரன்கோவிலில் உள்ள சாயப்பட்டறை ஆலைகளில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால், அவை இயங்குவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தடை விதித்துள்ளது.

இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை மின்வாரிய அதிகாரிகள் மூன்று பிரிவுகளாக ஆய்வு நடத்தி நகரில் இயங்கி வரும் 20 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டித்தனா்.

இதைக் கண்டித்து விசைத்தறி தொழிலாளா்கள், உரிமையாளா்கள் மாலையில் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம் முன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதில், செங்குந்தா் அபிவிருத்தி சங்கச் செயலா் மாரிமுத்து, விசைத்தறி தொழிலாளா் சங்கப் பொருளாளா் மாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, சங்கரன்கோவில் கோட்டாட்சியா் அனிதாவிடம் சாயப்பட்டறை கழிவுநீா் சுத்திகரிப்புக்கு மாற்று ஏற்பாடு செய்து தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுக்காக்க நடவடிக்கை எடுக்கக் வேண்டும் எனக் கோரி மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.