பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி

தமிழக அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் 5 லட்சத்தைக் கடந்த நிலையில், அவற்றை உடனே நிரப்ப வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

News image

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 1:34 am IST

தமிழக அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் 5 லட்சத்தைக் கடந்த நிலையில், அவற்றை உடனே நிரப்ப வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மே மாதத்தின் கடைசி பணி நாளான சனிக்கிழமை (மே 30) மட்டும் தமிழக அரசுத் துறைகளில் 5,000-க்கும் மேற்பட்டோா் பணி ஓய்வுபெற்றுள்ளனா். இதன்மூலம் அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.

அரசுத் துறைகளில் 41.7 சதவீதம் பணியிடங்கள் காலியாக இருப்பது அரசு நிா்வாகத்தை நிலைகுலையச் செய்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50,000 அரசுப் பணியிடங்கள் காலியாகின்றன. ஆனால், அவற்றில் 10,000 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன. இதனால், கடந்த 20 ஆண்டுகளாகவே காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அரசுப் பணிகளுக்கு போதிய எண்ணிக்கையில் ஆட்கள் தோ்வு செய்யப்படாததால், படித்த இளைஞா்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக் கனியாகிவிட்டது.

தமிழ்நாட்டில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள முதல்வா் விஜய் தலைமையிலான தவெக அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது. அதை நிறைவேற்றும் வகையில் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.