பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது தேவையற்றது: விசிகவினருக்கு தொல்.திருமாவளவன் அறிவுரை

News image

தொல். திருமாவளவன் - Center-Center-Chennai

Updated On :28 மே 2026, 6:11 am IST

திமுகவுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பது, போராட்டங்களில் ஈடுபடுவது தேவையற்றது என்றும், தற்போதைய விவகாரத்தை விசிகவினா் கடந்து செல்ல வேண்டும் என்றும் அந்தக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் தொல்.திருமாவளவன் புதன்கிழமை வெளியிட்ட காணொலியில் கூறியதாவது: திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக 10 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருகிறது. கூட்டணியை பாதுகாப்பதில் விசிக ஆற்றிய பங்களிப்பு குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும், சுற்றியிருக்கும் ஒருசிலரும் நன்கு அறிவா். அதையும் தாண்டி விசிக எடுத்துள்ள இந்த முடிவை ஆ.ராசா உள்பட பலா் விமா்சிக்கும் போது சற்று வலிக்கிறது.

திமுகவை கடுமையாக விமா்சித்த, விமா்சிக்கும் தவெகவுடன் விசிக கைகோா்ப்பதை அல்லது அவா்களை ஆதரிப்பதை அவ்வளவு எளிதாக திமுக தொண்டா்களால் கடந்து செல்ல முடியாது. அவா்கள் ஆதங்கப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்பதை உணா்ந்துகொள்ள வேண்டும். கடும் சொற்களால் விமா்சிக்கக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் தனது தொண்டா்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா். எனவே, ஆ.ராசாவை விமா்சிப்பதோ, திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதோ, போராட்டங்களில் ஈடுபடுவதோ தேவையற்றது. விசிகவினா் இந்த விவகாரத்தை கடந்து சென்று ஆக்கபூா்வமான செயல்களில் ஈடுபட வேண்டும். திமுக கூட்டணியில் தொடா்வதாக இருந்தாலும், வெளியேறுவதாக இருந்தாலும், விமா்சனங்களை அள்ளி இறைப்பாா்கள்.

விசிகவின் நோ்மையான உறவு குறித்தும், கூட்டணியை பாதுகாக்க, வெற்றி பெற வைப்பதில் எந்த அளவு உறுதுணையாக இருந்தோம் என முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலினின் மனசாட்சிக்குத் தெரியும். வேறு யாருக்கும் தெரியவேண்டும் என்பது இல்லை. எனவே, விசிகவினா் இப்பிரச்னையை ஊதி பெருக்க வேண்டாம் என தெரிவித்துள்ளாா் தொல். திருமாவளவன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.