சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

முதல்வர் விஜய்யுடன் தில்லி சென்ற 8 பேர்! யார் யார் தெரியுமா?

முதல்வராகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக தில்லி சென்ற விஜய்யுடன் இருந்தவர்கள் யார்? என்பது பற்றி...

News image

தில்லியில் முதல்வர் விஜய்.

Updated On :27 மே 2026, 8:30 pm IST

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக தில்லி புறப்பட்ட முதல்வர் ஜோசப் விஜய்யுடன் சென்றவர்கள் யார்? என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக இன்று காலை தில்லி புறப்பட்டார்.

அவர், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து இன்று (மே 27) காலை 9.30 மணியளவில் புறப்பட்ட முதல்வர் விஜய், சென்னை விமான நிலையத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காலை 10 மணியளவில் தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டார்.

தில்லிக்குச் சென்ற முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அதைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார்.

இரண்டு நாள்கள் பயணத்தில் நாளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் விஜய் சந்திக்கவுள்ளார்.

இந்த நிலையில், முதல்வர் விஜய்யுடன் சென்றவர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் விஜய்யுடன், பி. ஜெகதீஷ், விஷ்ணு ரெட்டி, பி. ராம்குமார், ஜெகதீஷ் அவஸ்தி, சி. ராஜேந்திரன், நயீம் அயித்தண்டி கூவகண்டி, ஜி. செந்தில்குமார் மற்றும் நரிசெட்டி மரியா ஜோசப் அனில் ஆகியோர் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ஆளுநர் மாளிகைக்குச் செல்லும்போது விஷ்ணு ரெட்டியை முதல்வர் விஜய் அழைத்துச் சென்றிருந்தார். கிரானைட் தொழிலதிபர் விஷ்ணு ரெட்டி, கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கிரானைட் தொழில் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ஷீரடி சாய் பாபா கோயிலில் விஜய் தரிசனம் செய்யும் போதும் விஷ்ணு, அவர் மனைவி நேத்ரா ரெட்டி மற்றும் மகள் நேஹா ரெட்டியுடன் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Details have emerged regarding the individuals who accompanied Chief Minister Joseph Vijay on his official visit to Delhi—his first such trip since assuming office as the Chief Minister of Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.