பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பாஜகவுக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது! ஆர். நிர்மல்குமார்

தமிழ்நாட்டில் மின்வெட்டு உள்ளதாக பாஜக முன்வைத்த விமர்சனத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் அளித்த பதில் குறித்து...

News image

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஆர். நிர்மல் குமார் - எக்ஸ்

Updated On :27 மே 2026, 9:40 pm IST

பாஜகவுக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது என மின்சாரத்துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார் இன்று (மே 27) தெரிவித்தார்.

சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

''பாஜகவுக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. அவர்களுக்கு தமிழகத்தைப் பற்றி பேச தகுதியே இல்லை. தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சியைப் பற்றி, அவர்கள் கூறும் விமர்சனத்தைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. இருப்பைக் காட்டிக்கொள்ள ஒரு சில கட்சிகள் பேசும்.

குறிப்பிட்ட இடத்தில் மின்வெட்டு இருக்கிறது என்றால் அதனை பரிசீலனை செய்வோம். அதை சரி செய்யும் பணிகளை மின்சார ஊழியர்கள் துரிதமாக செய்து வருகின்றனர். உயர்மட்ட அளவில் பழுதுகள் மதிப்பீடு செய்யப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது.

மின்சாரத் துறையில் உயர்நிலை அதிகாரிகள் இரவில் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். பழுதுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சரி செய்யப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி உடனான முதல்வர் ஜோசப் விஜய்யின் சந்திப்பு முழுக்க முழுக்க அரசு நிர்வாகம் தொடர்பானது. தனிப்பட்ட முறையிலானது அல்ல'' எனக் குறிப்பிட்டார்.

Summary

BJP has no idea what is happening in Tamil Nadu Minister Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.