பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தமிழக நகர்ப்புற மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப. கிருஷ்ணன் நியமனம்!

தமிழக நகர்ப்புற மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப. கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் கு.ப. கிருஷ்ணன்... - Instagram/Ku.pa. krishnan

Updated On :22 மே 2026, 7:29 pm IST

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக கு.ப. கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக தவெக நிர்வாகி கு.ப. கிருஷ்ணனை நியமனம் செய்து முதல்வர் ஜோசப் விஜய் ஆணை பிறப்பித்துள்ளார்.

இதுபற்றி, வெள்ளிக்கிழமை (மே 22) வெளியான அரசாணையில் கூறப்பட்டிருந்தாவது:

“ஏழை எளிய மக்களின் வாழ்விடங்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் குடியிருப்புகளை உருவாக்குதல், உறைவிடங்களில் மறுகுடியமர்வு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பலவேறு நலத்திட்டங்களை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக கு.ப. கிருஷ்ணனை நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் லால்குடி தொகுதியில் போட்டியிட்ட கு.ப. கிருஷ்ணன், அதிமுக வேட்பாளர் லீமாரோஸிடம் 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

KU.PA. Krishnan has been appointed as the Chairman of the Tamil Nadu Urban Development Board.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.